Wednesday, August 27, 2014

வெங்காயம்


ONION





Botanical Name:Allium cepa 
English : Onion
Tamil : வெங்காயம் 
Malayalam : ഉള്ളി
Hindi : प्याज़

எங்கள் தோட்டத்தில் அழகாய் முளைத்திருக்கும் வெங்காயம். மிக அற்புதமாக வளர்ந்து இருக்கிறது.





அதன் அழகான பூக்களை பார்த்தால் மனம் கொள்ளை போவது உறுதி. மிக அற்புதமான ஒரு மருத்துவ செடி வெங்காயம். ஒரு வெங்காயம் போட்டால் அதில் வரும் பூக்களில் இருந்து பல வெங்காயத்தை மீண்டும் உருவாக்கலாம்.


Tuesday, August 26, 2014

நோனி

NONI 



Botanical Name:Morinda citrifolia 
English : Noni/ Indian mulberry
Tamil : வெண்நுணா/ நோனி 
Malayalam : നോനി
Hindi : बारतुन्डी

எங்களிடம் உள்ள நோனி என்ற குறு மரத்தின் படங்கள் இவை. இதை தமிழில் வெண் நுணா என்று கூறுவார்கள். மஞ்சனத்தி மர வகை குடும்பத்தை சேர்ந்தது. இதன் டானிக் மிகுந்த மருத்துவ குணம் உடையது மற்றும் இதன் விலையும் அதிகம். 






இப்பொழுதுதான் காய் காய்த்து இருக்கிறது. பெரிய பச்சை நிறத்தில் உள்ள புழு வந்து இதன் இலைகளை சாப்பிட்டு நாசம் செய்கிறது. இதனை கட்டுப்படுத்த தினமும் செடியை ஆராய்ந்து ஒவ்வொரு புழுக்களாக பிடித்து அழித்து வருகிறோம். பழம் பழுத்தவுடன் சாறு எடுப்பதுதான் எப்படி என்று தெரியவில்லை.

Sunday, August 17, 2014

கரு ஊமத்தை

DATURA




Botanical NameDatura fastuosa linn
English : Devil's trumpet /Thorn Apple
Tamil : கரு ஊமத்தை
Malayalam : വെളുത്തഉമ്മം
Hindi : धतूरा 

தோட்டத்தில் இருக்கும் கரு ஊமத்தையின் படங்கள் தான் மேலே காண்பது. இதன் செடி ஆழியாறு அரசு மூலிகை தோட்டத்தில் இருந்து கொண்டு வந்தோம். இப்பொழுது பூக்கள் பூக்க ஆரம்பத்திருக்கிறது.

Saturday, August 16, 2014

ரோஸ் மேரி

ROSE MARY






Botanical NameRosemarinus officinalis
English :Rosemary
Tamil : ரோஸ்மேரி
Malayalam : റോസ്മേരി
Hindi : रोस्मेरी

மேலே காண்பவை எங்கள் அதிரடிப்படை முகாமில் உள்ள மூலிகை தோட்டத்தில் வளர்ந்திருக்கும் ரோஸ் மேரி செடி ஆகும். மிகுந்த நறுமணமுள்ள செடி இது. இதை தேயிலையுடன் கொதிக்க வைத்து தேநீராகவும் பருகலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும். இதை நறுமண பொருள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அது போக பல வித மூலிகை குணங்களை உள்ளடக்கிய அற்புதமான செடி இது. இதன் தண்டுகளை பிடுங்கி நட்டாலே வளர்ந்து விடும். 

எலுமிச்சை புல்

LEMON GRASS







Botanical NameCymbopogan flexuosus/ Cymbopogon citratus
English :Lemon grass
Tamil : எலுமிச்சைப்புல்
Malayalam :ഇഞ്ചിപ്പുല്ല്
Hindi : नीबू घास

எங்கள் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை புல்லின் படங்கள் மேலே உள்ளவை. முதன் முதலில் கேரளாவில் இருந்து ஒரு தண்டு கொண்டு வந்து வைத்தோம். இப்பொழுது நன்கு வளர்ந்து உள்ளது. அதன் தண்டுகளை பிடுங்கி நிறைய இடத்தில நட்டு வைத்திருக்கிறோம். நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தினமும் இதன் இலைகளை பறித்து துளசி இலைகளுடன் சேர்த்து மூலிகை தேநீர் தயாரித்து பருகுகிறோம். எங்கள் முகாமிற்கு வரும் அனைவருக்கும் இந்த ஹெர்பல் டீ தான் பரிமாறபடுகிறது.

Wednesday, August 13, 2014

ருத்ராக்ஷம்


RUDRAAKSH






 Botanical NameElaeocarpus ganitrus
English :Rudraksha
Tamil : உருத்திராட்சம்
Malayalam :രുദ്രാക്ഷം
Hindi : रुद्राक्ष

எங்கள் தோட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த ருத்ராக்ஷம் மரத்தினுடைய படங்கள் மேலே காண்பது. திரு. அப்துல் அஜீஸ் அவர்கள் கேரளத்தில் இருந்து பணி முடித்து திரும்பும் பொழுது கொண்டு வந்தது. நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இடை இடையில் பூச்சி தாக்குதலால் இலைகள் கருகுகிறது. பஞ்சகாவ்யம் நாங்களே தயாரித்து அதில் தெளித்த பிறகு இப்பொழுது நன்றாக வளர்கிறது. எத்தனை முக ருத்ராக்ஷம் வரப்போகிறது என ஆர்வமாக உள்ளோம். இன்னும் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

கற்றாழை


KATRAAZHAI












 Botanical NameAloe vera
English :Aloe vera
Tamil : கற்றாழை
Malayalam : കറ്റാർവാഴ
Hindi : घृतकुमारी 

எங்கள் தோட்டத்தில் வளரும் கற்றாழை இனங்கள். முதலில் ஒரே ஒரு சோற்று கற்றாழை வைத்தோம். பிறகு மெக்ஸிகன் வகை கற்றாழை, யானை கற்றாழை, பேய் கற்றாழை இனங்கள் உள்ளே வந்தன. தற்பொழுது சோற்றுகற்றாழை அதிகமான நாற்றுக்களை ஈன்டிருக்கிறது. 

Saturday, August 9, 2014

துளசி


TULASI


Botanical Name: Ocimum sanctum
English : Holy basil
Tamil : துளசி /வடவனம்
Malayalam : ലക്ഷ്മി തുളസി
Hindi : तुलसी 

             நான் துளசியில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  துளசி இந்தியாவை தாயகமாக கொண்ட மிக புனிதமான மருத்துவ செடி. இந்த பச்சை நிற துளசியை லக்ஷ்மி துளசி என்றும் சுத்தமான தமிழில் வடவனம், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா என்றும் கூறுவார்கள். துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இச்செடியின் இலை, தண்டு, பூ மற்றும் வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.


இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும்,பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி. நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்தநிவாரணி.

துளசி செடி முதன் முதலில் ஒரு செடி பிடுங்கி வந்து எங்கள் தோட்டத்தில் வைத்தோம். இப்பொழுது அதன் விதைகள் காற்றிலே பரவி எங்கள் தோட்டம் முழுவதும் பரவி இருக்கின்றது. அற்புதமான மணம் வீசுகிறது. இது போக எங்கள் தோட்டத்தில் இன்னும் 8 வகை துளசிகள் இருக்கின்றன. அதை பற்றி பின்னர் பார்க்கலாம். 


மூலிகை தோட்டம் 






                கோவையை சேர்ந்த திரு. சிவா அவர்களின் தோட்டம் வலைப்பதிவை படித்து பயங்கர பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக நானும் கோவையில் உள்ள எங்களது 105 பட்டாலியன், அதிவிரைவு படை முகாம், வெள்ளலூரில் எங்களால்   தீவிர  முயற்சிகளுக்கு பிறகு  வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மூலிகை தோட்டத்தினை பற்றி எழுதலாம் என நினைத்து இந்த வலைப்பதிவை ஆரம்பத்திருக்கிறேன்......

                இதில் நம்மால் மெது மெதுவாக மறக்கடிக்கப்பட்ட, மேலை நாடுகளின் தீவிர முயற்சியினால் வெற்றிகரமாக அப்புறப்படுத்த நமது பாரம்பரிய சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய இந்திய மூலிகை செடிகளை மீண்டும் ஞாபகப்படுத்துவதுதான்  எங்களுடைய கமாண்டன்ட் திரு. பௌலி அவர்களின் மேற்கோளில் எனது மற்றும் எங்கள் வீரர்களின் ஒரு சின்ன முயற்சி. 

       நீங்கள் யார் வேண்டுமானாலும் எங்கள் தோட்டத்திற்கு வருகை புரியலாம். எங்களது தோட்டத்தில் வீறு கொண்டு நிற்கும் மருத்துவ வீரர்களை (செடிகளை) பார்வையிடலாம். உங்களுடைய வருகை எங்களுக்கு பெருமை, அதுவே எங்கள் நோக்கத்திற்கு கிடைத்த வெற்றி.  

                   
         
                     எங்களது மூலிகை தோட்டத்தில் இதுவரை மொத்தம் 270 வகை அறிய மூலிகை செடிகளை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு செடிக்கும் ஒரு அறிவிப்பு பலகை வைத்திருக்கிறோம். அதில் செடியின் பெயர் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழியிலும் செடியின் தாவர பெயர், செடியின் மருத்துவ பயன்கள் போன்ற தகவல்களை தொகுத்திருக்கிறோம். காஷ்மீர்  முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த நமது இந்திய தேசத்தின் மூலிகை பொக்கிஷங்களை கொண்டு வர முயற்சி பண்ணுகிறோம். இன்னும் முயற்சி பண்ணி விரிவாக்க வேண்டும். மொத்தம் 4000 க்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே எங்கள் பணி இப்பொழுதுதான் ஒரு சிறிய அளவில் ஆரம்பத்திருப்பதாக உணர்கிறோம். காவல் பணி தான் எங்களுடய தலையாய பணி. அதற்கு இடையிலும் எங்களது அதிவிரைவுப்படை சமூகத்திற்கு பயனுள்ள பல நல்ல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. 

                          இதுவரை கோவை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறோம். அந்த சமூக அக்கறையின் ஒரு தொடர்ச்சிதான் இந்த மூலிகை பயணமும்.

(வாசம் வீசும்....)